நீங்களும் நானும், இதைப்
படிக்கும்பொழுது,  பலவித வியாக்கினங்களைப் புரிந்து கொண்டு
விட்டொம்.   பகவான் கிருஷ்ணரைப் பற்றியும்
அர்ஜுனனைப் பற்றியும் நமக்கே உரிய கற்பனைகளாலும் சிந்தித்தோம்.  ஒரு சிலவற்றை நீங்கள் ஒப்புக்கொண்டீர்கள்.  ஒரு சிலவற்றை நீங்கள் எதிர்த்தீர்கள்.  இருந்தும் நம் இருவருமே ஒரு குரலில்
ஒன்றுபட்டிருந்தோம்.  அதாவது நாம் இருவருமே
அந்த ஒரே பரமாத்மாவிலிருந்து வந்தோம் என்பதையும், நாம் அந்த பரமாத்மாவின் அங்கங்களே என்பதையும், ஒப்புக்
கொண்டோம்.   இந்த சூழலில் வயது வரம்பு
இல்லை, பணமும் ஒரு
பொருட்டல்ல. ஒரு அந்தஸ்து என்பது கிடையாது. 
இதைப் படிப்பதால் அல்லது எழுதும்பொழுதோ அல்லது இதைப் பற்றி வாதிடும்பொழுது, 
இன்றிலிருந்து நாளைக்கு நாம் மாறிவிடப் போவதில்லை.   நாம் செய்துகொண்டிருக்கும் பலவற்றை மீண்டும்
மீண்டும் செய்துகொண்டுதான் இருக்கப் போகிறோம். 
அதே போல்தான் செய்து கொண்டு இருப்போம். 
அப்படியே எதுவுமே அவரிடமிருந்துதான் வருகிறது என்று உணர்கிரேன்.  என்னையும் உட்படவே அவரிடமிருந்து வருகிறது
என்று உணர்கிறேன்.  இந்த உணர்வே
வாழ்க்கையில் எதிர்ப்படும் பலவற்றை மேலாண்மை செய்ய உதவும்.  அறிமுகத்தில் நான் ஒரு அடையாளத்திற்காக
தேடிக்கொண்டிருப்பதாகச் சொன்னேன்.  
இப்பொழுது அந்தத் தேடல் முடிந்து விட்டது.     இப்பொழுது நான் யார் என்பது எனக்கு விளங்கி
விட்டது.  நான் இப்பொழுது தனிமையாக
இருப்பதாக நினைக்கவில்லை.  எதிர்காலத்திலும்
எந்தவித தனிமையும் என்னை அண்டப் போவதில்லை. 
நிச்சயம் நான் தனியாக இருக்கப் போவதில்லை என்பதை உணர்கிறேன்.  உங்களுக்கு என்னுடைய கருத்துக்களிலிருந்து
வேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். 
நல்லது!    ஏனென்றால் நான் எழுதியது
எல்லாமும் அவர் கொடுத்தவையே.  நீங்கள் நினைப்பதும்
அவரால் உருவாக்கப்பட்டதுதான். 
எல்லாவற்றையும் எழுத்தில் சொல்லக் கூடியவரல்ல அவர்.    இங்கு சொல்ல்ப்பட்டிருப்பவை எல்லாம் நமக்கு
தூண்டுகோல்கள்.  அத்துடன்
மட்டுமல்லாமல்   உயிரோடு இருக்கும் ஒவ்வொரு
உயிரினமும் அவரை தங்களுக்குள் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  அப்படி என்றால், அவர் அங்கிருக்கும் நிலையை விட மேலும் நீங்கள் அவரை
வர்ணிக்கலாம்.   அவர் இங்கிருக்கும் நிலையை
விட மேலும் பூஜித்து அறியலாம்.  எந்தவித
முடிவும் இல்லை.  இது ஒரு நடந்துகொண்டே
இருக்கும் அனுபவம்.  எப்படி ஒரு கிராமவாசி, உலகத்தையே
பார்க்காமல்,   கிராமத்திலேயே வாழ்ந்து
கொண்டிருக்கிறாரோ,
அப்படியேதான்
நானும் பகவத் கீதையை  என் வழியிலேயே
புரிந்து கொள்ள முயற்சித்தேன். எனக்குத் தெரிந்ததை பிறருடன் பகிர்ந்து கொள்ள
முயற்சித்தேன். எத்தனையோ பண்டிதர்கள், உலகம் சுற்ரி வந்தவர்கள் இருக்கலாம்.  அவர்கள் யாவரும்  ஒவ்வொரு 
வரி வரியாகப் படித்துப் புரிந்து கொண்டவர்களாக இருப்பார்கள்.   ஒவ்வொரு சொல்லாகப் படித்தவர்களாக இருப்பார்கள்.
.   பகவத் கீதையைப் பற்றி ஏராளமான
ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்களாக இருப்பார்கள். 
அவர்கள் இந்தத் தொகுப்பில் ஏராளமான தவறுகளைக் கண்டுபிடிக்கலாம்.   இருந்தாலும், ஒரு கிராமவாசிக்கு, எவருக்கு பறவைகளின் இனிய கூக்குரல்கள் பிடிக்குமோ, அழகான
பட்டாம்  பூச்சிக்கள் பிடிக்குமோ, ஆரோக்கியமான
உணவைச் சாப்பிடுகிறாரோ,
அவருக்கு
திவி  ரேடியோவில் என்ன கொண்டு வருகிறது
என்பது தெரியாமல் இருக்.கலாம்.  கணினியின்
இயக்க மொழி பற்றி தெரியாமல் இருக்கலாம். 
ஒரு விமான பைலட்டின் தொழில்கள் பற்றி தெரியாமல் இருக்கலாம்.  ... 
இவைபற்றி அவர் கவலைப்பட வேண்டுமா என்ன?   நீங்கள்
கடைசியாக எப்படி புரிந்து கொள்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.  அப்படிப் புரிந்து கொண்டு எப்படி வாழ்கிறீர்கள்
என்பதும், கடவுளாகிய அவர்
உங்களுக்கு ஆசீர்வதித்திருக்கிறார் என்பதுமே அர்த்தமாகும்..!!! "  
No comments:
Post a Comment