சத்வ, ரஜஸ் மற்றும்
தமோ குணங்கள் மூன்றும் உடையவர்களிடத்தில் எப்படி நம்பிக்கை குடிகொள்கிறது என்று
அர்ஜுனன் பகவானிடம் கேட்டான்.   இந்த
மூன்று குணங்கள் கொண்ட நபர்களின் அவரவர்களுடைய வாழும் வாழ்க்கையைப் பொறுத்தே
இருக்கிறது.  ஒவ்வொரு மனிதரும் அவருடைய
நம்பிக்கையைப் பொறுத்தே அவர் உருவாக்கப்படுகிறார்.  முழுக்க முழுக்க ஒரு கடுமையான விரதத்தின்
சிரத்தையோடு இருப்பவர்கள் தங்கள் உடலை வருத்திக் கொள்கிறார்கள்.  சரியாக உண்பதில்லை.   தங்கள் உடலை வருத்திக் கொள்கிறார்கள்.  அவர்கள் எல்லோருமே நான் அவர்களுக்குள் இருப்பதை
அறிய முடியாமல் தவிக்கும் முட்டாள்கள். 
யாரெல்லாம் பழச் சாறுகள் குடித்துக் கொண்டும்,
இலை தழைகள் கூடிய உணவை உண்கிறார்களோ
அவர்களெல்லோரும் நல்ல பண்புகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.   காரமான உணவு பதார்த்தங்களை உண்பவர்கள்,
பெரும் வேட்கைகளை உடைத்தவர்களாக
இருப்பார்கள்.   எவரெவர் அழுகிப்போன பதார்த்தங்களையும் ருசியற்ற
உணவையும் உண்கிறார்களோ, தூய்மையற்ற பதார்த்தங்களை உண்கிறார்களோ அவர்கள் எல்லோரும்
அறிவிலிகளாக இருப்பார்கள்.  யார் நற்பண்பு
உடையவராக இருக்கிறாரோ மற்றும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்  பூஜை புனஸ்காரங்கள் செய்து வருகிறாரோ  மற்றும் பெரும் வேட்கைகளை உடையவர்கள்
எல்லோருமே   பூஜை செய்வார்கள் ஆனால்
கொஞ்சம் கொஞ்சம் எதிர்பார்ப்புக்களோடும் சில இலக்குகளோடும் செய்வார்கள்.  உடலுக்கு வேண்டிய விரதங்களின் நன்மைகள் யாவும்
கடவுளைப் பிரார்த்திப்பதால் கிடைக்கிறது. 
தூய்மையான வாழ்க்கை, நேர்மறை குணங்கள் - இவற்றால் அந்த நன்மைகள் யாவும்
கிடைக்கின்றன.  மற்றும் ஆரோக்கியத்தைக்
கெடாமல் பார்த்துக் கொள்வதால் கிடைக்கிறது. 
நல்ல வாய்மொழியினால் வரும் விரத பூர்வ நன்மைகள் யாவும்,
ஆரோக்கியமான நன்மைகளைக் கொண்டு வரும்.
சொற்களாலும் உண்மையையே பேசுவதாலும் கிடைக்கின்றன. 
அதே போல் மனம் தூயமையடைவதற்கு மனக் கட்டுப்பாட்டினால் கிடைக்கிறது.  மன அமைதியாலும், எண்ணங்களில் தூய்மை இவற்றால்
கிடைக்கிறது.  இவற்றிற்கு அப்பால் ஒரு
பரிசை வேண்டி விரதங்கள் இருப்பது என்பது அல்லது ஒரு முடிவை எதிர்பார்த்துச்
செய்வது என்பது எல்லாம், அந்த வேட்கையினால் வருவது. 
நிலையில்லாதது.   வெறும்
சிற்றாவல்களைத் தணிக்கக் கூடியது.  எந்த
ஒரு விரதத்தை முட்டாள்தனத்துடன் ஒருவர் செய்து வருகிறார்களோ அதை உதாசீனம் செய்ய
வேண்டும்.  ஒரு தர்மத்தைச் செய்யும்பொழுது
எந்தவித முடிவையும் எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும்.  மற்றும் அது போய்ச் சேர வேண்டிய மனிதர்கள்
உயர்வானவர்களாக இருத்தல் வேண்டும்.  அப்படி
என்றால் அது நற்பண்பாகும்.   கீழான
ஒருவருக்கு அது செய்யப்பட்டால் அது அறிவில்லாமை. 
ஒரு வேட்கையை தணிக்க அது செய்யப்பட்டால் அது மரியாதைக்காகச் செய்வது.     ஆனால் எவர் ஒருவர் தர்மம் செய்து கொண்டு,
விரதத்தை அனுஷிடித்துக் கொண்டு
பிறவற்றையும் செய்து கொண்டிருக்கிறாரோ ஆனால் பரமாத்மாவின் மீது நம்பிக்கை வைத்துச்
செய்து கொண்டிருக்கிறாரோ அவர் வேறு எந்தவித இலக்கையும் கருதாது செய்கிறாரோ அவரே
மூன்று வழிகளையும் அனுசரித்து முன்னேறுவார். 
     "நமது வாழ்க்கை:  நம் அன்றாட வாழ்க்கையில்,
டி.வி. பார்க்கிறோம்.  செய்தித்தாள் படிக்கிறோம்.  பயணிக்கிறோம். 
எத்தனையோ விளம்பர போர்டுகளைக் காண்கிறோம். 
ஆனால் எல்லாவற்றையும் கூர்ந்து கவனிப்பதில்லை.   ஒரு இரு சக்கர வண்டியோ அல்லது நான்கு சக்கர
வண்டியோ வாங்க நின்2ஐத்தால், எத்தனையோ விளம்பரங்களை அதே செய்தித்தாளில் பார்க்க
முடிகிறது.    அவற்றையே டீ.வி. சேனல்களில்
பார்க்க முடிகிறது.  ஷாப்பிங் இடங்களிலும்
காண முடிகிறது.  அவை எல்லாம் உங்கள்
எதிர்பார்ப்புக்களுக்காகவா வெளியிடப்படுகின்றன?   இல்லை... அவை அங்குதான் எப்பொழுதும் வருகின்றன.  நாம் அவற்றை கண்கொண்டு பார்ப்பதில்லை.  தேட ஆரம்பிக்கும்பொழுது நம் கண்களில் அவை
படுகின்றன.  (இன்றைய கால கட்டங்களில் பிரசுரிப்பவர்கள்
யாவ் அரும், 'சூடான'
தலைப்புக்களையே நாடிப்
பிரசுரிக்கிறார்கள்.    அதே போலத்தான்
நம்பிக்கையையும் நாம் பார்க்கிறோம்.  ஆகவே
நம்பிக்கையுடன் தேடுங்கள்.   அது கிடைத்து
விடும் உடனே.  நமக்கு வேண்டுவதே கிடைத்து
நாமே கிடைத்த பொருளாகி  விடுவோம்.    வேண்டியது நம்பிக்கை...  கடவுள் உங்களுக்குள் இருக்கிறார் என்பதை
நம்புங்கள்.  கடவுளை நாம் ஏன்
கண்டுபிடித்து அறிய முற்பட வேண்டும்? 
...  பரமாத்மாவை அறியவோ அவரை அடையவோ ஒரே வழிதான்
இருக்கிறது.  நம்பிக்கை என்பதுதான்
அது.   . 
காற்றை உள்ளே வாங்கி விட்டு பின் வெளியிடுகிறோம்.  இந்த முறையை என்றைக்காவது நிறுத்த முடியுமா?   இல்லை.  நிறுத்தினால் இறந்து
விடுவோம்.  .. காற்று என்ப்து என்ன?   அது பரமாதமாவின் ஒரு அங்கம் இல்லையா?  
எல்லாமே
அவரிடமிருந்து வந்தவைதானே.  அவர் பூஜை
அறைக்குள் மாத்திரம் அல்ல.  அல்லது ஒரே
இடத்தில் மட்டும் அல்ல.  ...  அல்லது அலாவுதீன் விளக்கிலிருந்து வந்த பூதம்
என்று நினைக்கிறோமா? 
... நான் அதைத்
தேய்த்தபொழுதெல்லாம் வருவாரா? 
..  அது போல எத்தனையோ பூஜை புனஸ்காரங்கள் இருக்கத்தான்
செய்கின்றன.  ..  அவற்றில் சில விஞ்ஞான பூர்வமான காரணங்கள்
கொண்டவை.  அவற்றுடன் சுத்தம் சேர்ந்து
அனுஷ்டிக்கப்படுகிறது.    அதற்கு அப்பால்
ஒன்றுமில்லை.  வீட்டில் யாராவது இறந்து
விட்டால்ஓ அல்லது ஒரு குழந்தை பிறந்தாலோ அல்லது பெண்கள் யாராவது விட்டிற்கு
விலக்கமாகிப் போய் விட்டாலோ, இப்படி ஏதோ ஒன்று நடந்தால், அந்த சம்பவங்களை எல்லாம் சற்றே
விலக்கப்பட வேண்டிய நிலைகளில் வைக்கிறோம்.  
.. அவைகளை புண்ணிய நிலைகளிலிருந்து நக்ர்த்தி வைக்கிறோம்.  .. 
கடவுள் மயானத்தில் இருந்தால் (உதாரணத்திற்கு சிவபெருமான்)  கடவுள் ஒரு பெண்ணின் உடம்பிலும் இருக்கத்தானே
செய்கிறார்.  அவளுடைய ஆன்மாவிலும் அவர்
இருக்கிறார்.  கடவுள்தானே அந்த அழகான
பிறப்பான குழந்தையைப் பெற்றுக் கொடுத்தார். 
இதற்காக எல்லாம் கடவுளைத் தனியாக வைத்துப் பார்ப்பது தவறு.  உங்கள் வீட்டிற்கு ஒரு வருகையாளராக வந்து
சாப்பாடு/பிரஸாதம்  சாப்பிட வந்துவிட்டுச்
செல்பவரா?   ...  அவரோ
பரமாத்மாவானவர்.  அவரில்லாமல் இந்த
உலகத்தில் எதுவும் அசையாது.   ஒரு கணம் கூட
உயிரோடு இயங்கப் போவதில்லை.  அவரே
உயிருக்குள் இருக்கும் இரத்தமானவர்.  அவரே காற்றாகவும்
இருக்கிறார்.  அவரே நீராகவும்,
அவரே உயிராகவும்,
அவரே பொருளாகவும் மற்றும் எல்லாமாகவும்
இருக்கிறார்...   சுத்தத்தை எடுத்துக்
கொள்ளுங்கள்.   கடவுள் ஒரு கணத்திற்கு
எதிலும் இல்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்.  
..  ஏதோ ஒரு சடங்கைச் செய்து
முடித்து விட்டு  கடவுளுக்கே
எல்லாவற்றையும்  அர்ப்பணிக்கிறோம் அதற்குப்
பிறகு கோபமுள்ள ஒரு இளைஞனாகப் பார்க்கிறோம் அல்லது ஒரு கோபமிக்க ஒரு பறவையாகவோ
அல்லது கொல்பவராகவோ அல்லது கடன் கொடுப்பவராகவோ அல்லது தியாகம் செய்பவராகவோ அல்லது
ஒரு தலைவனாகவோ அல்லது எந்த ஒரு உருவத்திலாவது உருவகப்படுத்திக் கொண்டால்,
அதே உருவத்தில்தான் அவர்
வருவார்....  எவருமே கொடுக்கப்பட்ட
நியமங்களை எல்லாம் பரிபூரணமாகத் தெரிந்து கொண்டு செயலாற்றி விடப் போவதில்லை.  ஆகவே மனிதர்களின் ஆற்றலைப் பொறுத்துத்தான் பூஜைகள்
புனஸ்காரங்கள் எல்லாம் உருவாக்கப்பட்டிருக்கின்றன.   காலப் போக்கில் அவை எல்லாம்,
விதிகளாக மாறி விட்டன.  .  
இருந்தாலும் நீங்கள் அவரை ஒளியாக பாவித்தால், அவர் உங்களுக்கு ஒளியாகத்தான்
தெரிவார்.  அவரை ஒரு துப்பாக்கி என்று
கற்பனை செய்து கொண்டால், அவர் ஒரு துப்பாக்கியாகத்தான் தெரிவார்.  ...  
அவருக்கு எது ஒன்றின் மீது பற்றுஇ கிடையாது மற்றும் அவர் எவருக்கும்
சமமானவரே.  ...  நமது நம்பிக்கைதான் நம்மை நமக்கு உரிய
தகுதிக்கு ஏற்றது போன்ற நிலைக்கு எடுத்துச் செல்கிறது.
No comments:
Post a Comment