Tuesday, September 20, 2016

அத்தியாயம் 14 : மூன்று குணங்கள் கொண்ட யோகம்

பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனைப் பார்த்துச் சொன்னது.  அவரே உயிருள்ள எல்லா ஜீவன்களுக்கும் தந்தை, உயிருள்ள பிராணிகள் அனைத்தின் உடல் அமைப்பையும் தன்னிடத்தே கொண்டிருக்கிறார்.  எல்லா உயிரினங்களும் பிறக்கும்பொழுதே, மூன்று குணங்களோடுதான் பிறக்கிறார்கள்.  அவையாவன- சத்வ குணம், ரஜோ குணம் மற்றும் தமோ குணம் என்பனவாகும்.   சத்வம் என்பது நற்குணத்தைக் குறிக்கிறது, ரஜோ குணம் என்பது பெரும் ஆவல்கள் அல்லது ஆசைகளைக் குறிக்கிறது மற்றும் தமோ குணம் என்பது அறிவில்லாமையைக் குறிக்கிறது.  நற்குணங்கள் அறிவு, ஞானம் மற்றும் ஒளி பெறுதல் இவற்றைக் குறிக்கிறது. ரஜோ குணம் என்பது ஆசை, மகிழ்ச்சி, வலி, நெருக்கம், போன்றவற்றையும், அறிவின்மை இருள், கொடுமை பைத்தியக்காரத் தனம் இவற்றைக் குறிக்கிறது.  ஒருவரிடம் இருக்கும் நற்குணம் ஆசைகளையும் அறிவீனத்தையும் வெல்லத் தக்கது.  அதே போல் அறிவின்மையும் கூட நல்ல குணத்தையும் ஆசைகளையும் வெல்லத் தக்கது.  இவை எல்லாமே ஒருவருடைய வாழ்க்கைக் காலத்திலேயே நடக்கக் கூடியவை.  எந்த தருணத்திலும் இவை நடக்கலாம். ஒருவர் இறக்கும்பொழுது, ஒருவரிடம் நற்குணமே படிந்து நின்றால், அவர் சுவர்க்கத்தையே அடைவார்.  மீண்டும் பிறக்கும்பொழுது நற்குணங்கள் மிக்கவர்களில் ஒருவராகவே பிறக்கிறார்.  ஒருவர் ஆசைகள் மிக்கவராக இருந்தால், பேராசை மிக்கவர்களிடையே ஒருவராகப் பிறக்கிறார். அறிவீனத்தையே கொண்டிருந்தால், அவர் நரகத்தையே அடைகிறார்.  அதே குணமுடையவர்களிடையே மீண்டும் பிறக்கிறார் அல்லது ஒரு மிருகமாக;ப் ;பிறக்கிறார்.   இவை எல்லாவற்றையும் அறிய முடிந்தவரே வாழும் உயிரினங்களை வாழ வைக்கிறார் மற்றும் அந்த கடவுளே எல்லாவித மயக்கங்களையும் உருவாக்குகிறார் என்பதை அறிந்து கொண்டதும், அவற்றிலிருந்து தூர நிற்கிறார்.   எந்தவித செயல்பாடுகளோடும் மற்றும் அதன் முடிவுகளோடும்  அவர் தன்னை இணைத்துக் கொள்ளாமல், தனித்து நிற்கிறார்.  மகிழ்ச்சியையோ அல்லது சோகத்தையோ அல்லது வெறுக்க மாட்டார்.   அவருக்கு இரண்டும் ஒன்ரே.   இவரே பரமாத்மாவை அடைகிறார்.

    "நமது வாழ்க்கை:  நமக்கு முன் சில நிலைகளைக் கற்பித்துக் கொள்வோம்.  எப்பொழுதாவது நாம் எவருக்காவது உதவி செய்திருக்கிறோமா? என்று கேட்டுக் கொள்வோம்.   எப்பொழுதாவது நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு, காலம் இத்துடன் நின்று போய் நான் ஏன் இப்பொழுதே இறந்து விடக் கூடாது? என்று நினைத்ததுண்டாஎப்பொழுதாவது நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்றும், வஞ்சிக்கப்பட்டு விட்டோம் என்றும், யாரோ ஒருவரைப் பற்றி தூஷணையாகப் பேசிக் கொண்டு இருந்தோமாஉண்மையில் சொல்லப் போனால் இவற்றிற்கு எல்லாம் பதில், நம்மில் பெரும்பாலோரிடமிருந்து, 'ஆம்' என்றுதான் வரும்.  அதற்கு என்ன அர்த்தம்?   அதாவது நாம் நற்குணங்கள், ஆசைகள் மற்றும் அறிவீனம் போன்ற குணங்களுக்கு இடையேதான் பயணித்து க் கொண்டு வருகிறோம் என்பதே அர்த்தம்.  நாம் பிறருக்கு சேவை செய்யும்பொழுதோ  மற்றும் அந்த உதவி அவருடைய நிலைமையை மேம்படுத்தி இருக்கிறது என்று கண்டால், அதைக் கண்டு நீங்கள் மகிழ்வது நற்குணத்தின் ஒரு அங்கமே.  ஒருவேளை ஆசைகள் என்ற அங்கத்திற்குள் நாம் சென்று கொண்டிருப்போம்.  அதை ;மட்டுமே நம்மால் செய்ய முடியும் என்று கருதினால், நாம் அறிவற்றவர்கள் என்று அர்த்தம்.  வெறும் செயல் ஒன்றில் ஈடுபடும்பொழுது இந்த மூன்று குணங்களுமே நம்மை ஆட்கொள்ளக் கூடியவை. நம்மில்  பெரும்பாலோர்   ஆசைகளால் உந்தப் பட்டே வாழ்கிறோம்.  ஏனென்றால் நம் செயல்களுக்கு எல்லாம் பின் இந்த ஆசையே இருக்கிறது.  நம்மை மகிழ்ச்சிக்கு உட்படுத்துகிறது.   ஒரு சாதனையைச் செய்து விட்ட சந்தோஷத்தைக் கொடுக்கிறது.  அதே சமயத்தில் நாம் உணர்ச்சி வசப்பட்டு, மிகவும் உணர்ச்சிகளால் தாக்கமடைந்து விட்டோமானால், கஷ்டத்தையே தருவித்துக் கொண்டு விடுகிறோம்.  ஒரு சராசரி இந்தியனின் வஅழ்க்கையில், அரசியல் பேசுவது, கிரிக்கட் ஆடுவது (விளையாட்டு), திரைப்படம் பார்ப்பது, நடிகர்களைப் பார்ப்பது, பங்குச் சந்தையில் ஈடுபடுவது மற்றும் நிலம் வகையறாக்களில் வாங்குதல், விற்றலை மேற்கொள்ள்வது, ஆன்மிகத்தில் புதிய வழிகளை நாடுவது (தியானத்துடன்) அல்லது ஆரோக்கியத்துடன் இருப்பதை நாடுகிறோம். - ஒரு சில ஆண்களுக்கும் பெண்களுக்கும் இது ஒரு நாகரிக விரிவாக இருக்கிறது.  மற்றும் உண்ணுதலும், பயணித்தலையும் அவர்கள் மேற்கொள்ளுகிறார்கள்.  இவை எல்லாமே நமக்கு ஆசைகள், நாம் பேசுகிறோம் மற்றும் பார்க்கிறோம்.  இவற்றைப் பற்றி எல்லாம் படிக்கிறோம். நமது கணிக்கும் சுபாவத்தையும் அறிவையும் திருப்திப்படுத்திக் கொள்கிறோம்.  இவை எல்லாம் ஆசையின் மாறுபாடுகளே.  ஆத்ம விசாரணையில் ஈடுபடுவதை விட்டு விட்டு, அதை உதறி விடுகிறோம்.  ஒரு மணி நேரத்திற்கு நம்மால் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது.  டி.வி.யோ, மொபைல் டெலிபோனோ, ரேடியோவோ அல்லது சுற்றத்தில் நண்பர்களோ இல்லாமல் நம்மால் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. நமக்கு நம்மை திருப்திப் படுத்த ஏதோ ஒன்று அல்லது ஏதோ ஒருவர் அவசியம் சுற்றத்தில் வேண்டும்.  இங்குதான் ஆசைகள் நம்மை உந்த வைக்கின்றன.   நம் செயல்களை யாராவது புகழ்ந்தால், நாம் சந்தோஷமடைவது இல்லையா?   ஆமாம்.  நம்மில் பெரும்பாலோர் அதை இரசிக்கிறோம்.  யாரோ ஒருவர் ஒரு பரிசுப் பெட்டியை அழகாக பரிசை உள்ளே வைத்து உங்களிடம் கொண்டு வந்து கொடுத்தால், அதை திறந்து என்ன இருக்கிறது என்று பார்க்க நாம் யாவரும் ஆசைப்படுவது இல்லையாஉடனே நம்மில் சிலர் அந்தப் பரிசின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று மதிப்பிட ஆரம்பிகிக்கிறோம்.  சம்பந்தப்பட்டவருக்கு நாம் எவ்வளவு மதிப்பிற்க்கு பரிசு கொடுத்தோம் அத்துடன் அதை ஒப்பிட்டு நோக்குகிறோம்.


     ஒரு சில சமயங்களில் நாம் சந்தோஷப்படுகிறோம் - அதாவது நாம் சொல்வதைக் கேளாதவனுக்கு தண்டனை கிடைக்கும்பொழுது மிகவும் சந்தோஷப்படுகிறோம்.   அல்லது அவனுக்கு பிரச்னைகள் சூழும்பொழுது அப்படி சந்தோஷப்படுகிறோம்.  அவனைப் பார்த்துச் சொல்லப் பிரியப்படுவது - 'உனக்கு அப்பொழுதே சொன்னேன் பார்த்தாயா?' என்றெல்லாம் சொல்ல நினைக்கிறோம். சில சமயங்களில் கடவுளிடம் சென்று மிகவும் பிரார்த்தனை செய்து கொள்கிறோம் - மற்றவனுக்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டுகிறோம். ஒரு சில சமயங்களில், 'உனக்கு நான் சரியான பாடம் கற்பிக்கிறேன் பார்!  ' என்று சவால்கூட விடுகிறோம்.  ... அதைச் செய்ய நாம் யார்நாம் என்ன செய்கிறோம் என்பதை உணர்கிறோமா?   நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து செய்கிறோமா?   நல்லதும் கெட்டதும் அவரவர் செய்கையால் அவர்களுக்குக் கிடைப்பது.   ஒருவருக்கு அவசியம் கிட்ட வேண்டியது கிட்டியே தீரும்.  வெறும் காழ்ப்புணர்ச்சியைக் காட்டி, நம் மனத்தில் அறியாமையையும் இருளையும் பரவ விடக் கூடாது.  ஆமாம் .. அதைக் கொஞ்சம் பழக்கிக் கொள்வது கடினம்தான்.   இருந்தாலும் பிறருக்கு பாடங்களைச் சொல்லிக் கொள்வதிலும், அல்லது கடவுளை நமக்காகச் சென்று செயல்களில் ஈடுபடச் சொல்வதும், நமது மனத்திற்கு நல்லது. .. ஒன்று மாத்திரம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.   இந்த இடங்களில் எவருக்கும் விதிகளுக்குப் புறம்பாகச் செல்ல முடியாது...   யாரோ ஒருவர் வாழ்க்கையை நன்கு அனுபவிக்கிறார்கள் என்று கற்பனை செய்வதும், - அப்படி நினைப்பதற்கு அவர்களுக்கு தகுதி இல்லாமல் இருக்கலாம் - அவர்களுடைய வாழ்க்கை முழுக்க இன்னல்கள் உடையதாகவே இருப்பதும் அவர்கள் அறியாமையிலேயே இருக்கிறார்கள் என்பதையும் நம்புங்கள்.     இதைவிட வேறு என்ன வேண்டும்?   இதைவிட வாழ்க்கை வேறு எந்த வித்த்தில் நன்றாக இருக்க முடியும்?

No comments:

Post a Comment